அப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் புனிதநூல் ஒன்றுக்கு அவமரியாதை செய்யப்பட போவதாக அறியும் போது நெஞ்சு துடிக்கின்றது இன்று இவர்கள் குரானை அவமதிப்பார்கள் நாளை கோபங்கொண்ட வேறு இஸ்லாமிய நாடு பைபிளை அவமரியாதை செய்யும் இருதரப்பும் வாய்ச்சண்டை போட்டால் பரவாயில்லை வாய் முற்றி கைகலப்பில் கொண்டு விட்டால் இரண்டுதரப்பிலுள்ள அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்
அமெக்கா சீறாட்டியதால்தான் ஓசாமா போன்றோர்கள் வளர்ந்தார்கள் வல்லரசின் தவறுக்கு நல்ல தண்டனையை அந்நாடு மட்டுமல்ல சர்வதேசமே பெற்றாகி விட்டது
குரான் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமான புனிதநூல் அதை எரித்தால் நமக்கென்ன அவமதித்தால் நமக்கென்ன என்று உலக மதத்தலைவர்கள் வாய்மூடி கிடந்தால் மானிட குலத்திற்கு பெறும் தீங்கு செய்தவர்களாகி விடுவார்கள்
ஏசுநாதரும் அன்பையும் அமைதியையும் தான் போதித்தாரே தவிற வன்முறையை உபதேசிக்க வில்லை இந்த விஷயத்தில் மற்ற மதத்தினரைக் காட்டிலும் கிறிஸ்த்துவ மதத்தினர் உலகம் முழுவதும் அணிதிரண்டு குரானை கொழுத்தும் முட்டாள் தனத்தக் கண்டிக்க வேண்டும்
அந்தக் குறிப்பிட்ட அமெரிக்க திருச்சபையை கிறிஸ்த்தவ மார்க்கத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டும்தான் உண்மையில் கர்த்தர் ஆசிர்வதிப்பார்
ஆனால் கிறிஸ்த்தவ பாதிரிகள் அப்படி அல்ல நல்ல படிப்பாளிகள் தாங்கள் செய்வது என்ன அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்களே இத்தகைய இழிசெயலை செய்தால் படித்தவன் பாவம் சூது பண்ணினால் போவான் பேவான் ஐயோ என்று போவான் என மகாகவி பாரதியார் சொன்னதைத்தான் நாமும் சோல்லவேண்டி வரும்
- sriramanandaguruji's blog
- Login or register to post comments
- 430 reads
கருத்துகள்
பகட்டறிவால் மத நூல்களை
பகட்டறிவால் மத நூல்களை எரிப்பது, மத துவேஷங்களை செய்வது போன்ற கிறுக்குத்தனமானது இது.
அமெரிக்காவே இதை தடுக்க வேண்டும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தவறு செய்பவர்களில் படித்தவன்
தவறு செய்பவர்களில் படித்தவன் படிக்காதவனென்றில்லை! படிக்காதவனை விட படித்தவன்தான் இந்த மாதிரி கிறுக்கு தனமான செயல்களில் ஈடுபடுகிறர்கள்! ஒவ்வொரு மதமும் எதற்க்காக ஏற்படுத்தப்பட்டதோ அதை அம்மதத்தை சார்ந்தவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது தான் உண்மை! மன அமைதிக்கு, மனிதனுக்கு மனிதன் உதவுவதை தான் மதம் போதிக்கிறதே தவிர, மனிதனை மனிதன் கொல்வதற்கல்ல! ஆனால் உலகில் மக்களின் மனதில் மதம் எனும் மதத்தை விஷமாக விதைத்தது மததலைவர்களின் மதி நுட்பத்தை காட்டுகிறது! இதை செய்யாதே என சொல்ல சட்டத்தை தவிர வேறு ஒன்றுக்கும் உரிமையில்லை என்பது உண்மை தானே? மதம் பற்றிய விஷயங்களில் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும், மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்மை செய்ய போய் அவனது நேர்மையான செயல் அவன் சார்ந்த மதத்திற்க்கும் அம்மத மக்களுக்கும் எதிரியை உருவாக்கிவிடும் எனவே கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இது ஒரு விளம்பர
இது ஒரு விளம்பர உத்தியாகத்தான் தெரிகிறது. உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் இப்படி செய்ய மாட்டான். இது நிச்சயமாக நடக்காது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்!












