நாம இவங்கள கடத்தி
நாள் இரண்டு ஆயிடுச்சு,
தலைவரும் மேடை போட்டு
தப்பாம பேசிட்டு இருக்காரு.
நாளைக்கு காலையில
நாம இங்க இருந்து
ஓடிடலாம்னு செய்தி
ஒன்னும் வந்துடுச்சு.
வந்த தடம் பதியாது
வந்தமர்ந்து கொண்டாள்
காதலிடம் தான்
கேட்ட விவரம் யாவும் சொன்னாள்.
நிச்சயம் நாளை
நாம் தப்பித்துவிடுவோம்
என்ற நம்பிக்கை தீர்மானம்
எடுத்தாள்.
தான் எண்ணியது
தவறல்ல என்பதை
காதல் உணர்ந்தான்.
இப்படியும் நடப்பார்களா
இந்த ஊரிலென்றாள்.
இவர்களுக்காக உழைப்பதில்
இம்மியளவும் அர்த்தமில்லை.
இல்லை, திருத்திக்கொள்.
இப்படியும் நடக்கிறார்கள்
சில பேர்.
சமுதாயத்தின் ஒரு பிரிவை முழுச்
சமுதாயமாகக் கருதக் கூடாது.
வழியை தேர்ந்தெடுப்பதில்தான்
வாழ்க்கை இருக்கிறது.
பசுவின் வேடத்திலிருக்கும்
புலியும் அதிகம்,
புலியின் வேடத்திலிருக்கும்
குள்ளநரியும் இங்கு அதிகம்.
பல வர்ணம் கொண்ட
பாரத சமுதாயமிது.
பணம் மட்டுமே
பெரிதென மதிக்கும்
மதிகெட்டவர்களால்
மரணங்கள் ஜனிக்கும்
மனம் மட்டுமே
மதிக்கும் நல்லவர்களால்
மரணங்கள் மரிக்கும்.
சலசலவென வந்த
சத்தம் இருப்பிடத்தின்
தூரத்தில் கேட்டது.
சாமியும், இம்ரானும்
எழுந்தனர்.
அய்யா,
நம்மள காப்பாத்தான்
யாரோ வர்றா மாதிரி இருக்கு.
நிச்சயம் காவல்துறையினராகத்தான்
இருக்க வேண்டுமென்றான்.
தலைவா நாம இருக்கிற
தடம் கண்டுபிடிச்சுட்டாங்கன்னு
நினைக்குறேன், வாங்க
நாம தப்பிச்சுடலாம்னு
கூட்டத்திலொருவன் அவசர
தந்தி அடித்தான்.
அவர்கள் பதறினர்
அங்கும் இங்கும் ஓடினர்,
எந்தப் புறம் செல்லலாமென
எண்ணித் தவித்தார்கள்
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]
- Baskar's blog
- Login or register to post comments
- 3484 reads



