ரஹீம்கஸாலி's படம்


லைஞர் பேட்டி தொடர்கிறது....
முந்தைய பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.

கேள்வி: ஜெயலலிதா போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே?

கலைஞர்: இருக்கலாம்...நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து இந்த ஒன்றரை வருடத்தில் முதன்முதலாக மக்களை சந்திக்க வருவதால்..ஜெயலலிதா எப்படி இருக்கார் என்று பார்க்க வந்த கூட்டம்தானே தவிர, அவர் பேச்சை கேக்க வந்த கூட்டமல்ல...

கேள்வி: உங்கள் கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கே பதவி வழங்குகிறீர்களே.?

கலைஞர்: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கள் கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் என்று. அவர்கள் எங்கே போகப்போகிறார்கள்? பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களுடனே இருப்பார்கள். ஆனால், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் இன்னும் நிறைய பேர் எங்க கட்சிக்கு வருவாங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்காரே...நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்.

கேள்வி: அப்படியானால் ம.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?

கலைஞர்: நாங்கள் ம.தி.மு.க-வை ஒரு கட்சியாக நினைக்கவில்லை. ம.தி.மு.க-என்றால் மறுபடியும் தி.மு.க. என்று தானே அர்த்தம்.(சிரிப்பு)...

கேள்வி:ம.தி.மு.க-வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது பற்றி?...

கலைஞர்: தம்பி வைகோ அண்ணா தி.மு.க-வின் கிளை செயலாளர் போல செயல்படுவதால் அவருக்கு எதற்கு தனியாக ஒரு கட்சியென்று தேர்தல் கமிஷன் நினைத்திருக்கலாம்(மறுபடியும் சிரிப்பு)

கேள்வி: கடந்த ஒருமாதமாக எந்த ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லையே?

கலைஞர்: அதை ஏன் கேட்கறீங்க...ஒரு மாசமா பாராட்டு விழாவே இல்லையென்பதால், அதைக்கூட பாராட்டி, பாராட்டுவிழா இல்லாத பாசத்தலைவன்னு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்ன்னு தம்பி ஜெகத் ரட்சகன் ஒரே அடம். நான்தான் மறுத்துட்டேன்.

கேள்வி: பம்பு செட் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்களே?

கலைஞர்: ஆமாம். ஆளுக்கொரு டிராக்டர் கொடுக்கலாம்ன்னு தான் முதலில் நினைத்தேன், ஆனால், இப்ப நிதிநிலைமை சரியில்லாததால பாம்பு செட்டோட நிறுத்திக்கிட்டேன். அதில் கூட பாருங்க, பாம்பு செட் கொடுத்த பர்மனென்ட் தலைவன்னு ஒரு பாராட்டு விழா அடுத்தவாரம் ஜெகத் ரட்சகன் தலைமையில துரைமுருகன் முன்னிலையில நடக்குது . தம்பி ரஜினி, கமல், வாலி, வைரமுத்து எல்லாம் கலந்துக்கறாங்க.

கேள்வி: இலங்கை பிரச்சினை பற்றி?

கலைஞர்: அதுபற்றி நேற்றுக்கூட சொக்கத்தங்கம் சோனியாவுக்கும், பிரதமர் ராகுல்காந்தி மன்னிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஒரு தந்தி அடிச்சாச்சே..உடன்பிறப்புகளையும் தந்தி அடிக்க சொல்லி முரசொலியில் ஒரு கடிதம் எழுதிட்டேனே,நீங்கள் படிக்கலையா?


கேள்வி: இலங்கை பிரச்சினைக்காக தந்தி அடிக்க சொல்லும் நீங்கள் மந்திரி பதவிக்காக டெல்லி செல்கிறீர்களே?

கலைஞர்: அப்படியல்ல..இப்போது ஆளாளுக்கு செல்போன் வச்சுக்கு எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்ன்னு அடிச்சுடறாங்க... அதனால தந்தி அடிப்பது குறைந்து போயி தபால் துறை நட்டத்தில் இயங்குதுன்னு அந்த துறைக்கு அமைச்சரா இருக்க தம்பி ராஜா கேட்டுக்கிட்டதால நான் தந்தி அடிக்க சொன்னேன். அன்னைக்கு மட்டும் தபால்துறைக்கு எவ்வளவு வருமானம்ன்னு கேட்டுப்பாருங்க.

கேள்வி: அப்படியென்றால் மந்திரிப்பதவி கேட்டும் ஒரு தந்தி அடிக்க வேண்டியதுதானே?
கலைஞர்: அடிக்கலாம்தான். ஆனால் நான் ஒருவன் தந்தி அடிப்பதாலென்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது? அதான் விமானத்துக்கு வருமானம் கொடுப்பமேன்னு கிளம்பிட்டேன். மக்களுக்கு நல்லது நடக்கனும்ன்னா உடல் நிலையைக்கூட கணக்கில் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.

கேள்வி: யாரோட மக்களுக்கு? அழகிரி, கனிமொழி போன்ற உங்களின் மக்களுக்கா?
கலைஞர்: யார் நீ? ஜெயா டி.வி. நிருபரா? முதல்ல வெளியபோய்யா. சரி பேட்டியை முடித்துக்கொள்வோம். . எனக்கு பொன்னர் சங்கர் படத்துக்கு கதை வசனம் எழுதும் வேலை இருக்கு.

5
Your rating: None Average: 5 (1 vote)
http://ragariz.blogspot.com/2010/08/2.html

கருத்துகள்

vinoth's படம்

வீட்டுக்கு அருவாவோட ஆட்டோ


5

Big smile

வீட்டுக்கு அருவாவோட ஆட்டோ வரப்போகுது .......
கவனம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


raaamu's படம்

இவருக்கு டைம் சரியில்ல போல.


இவருக்கு டைம் சரியில்ல போல. ஏனுங்கண்ணா நீங்க வெளிநாட்டுல இருக்கீங்களா.