
இன்று என் பெருமதிப்பிற்குரிய என் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்ட பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் இறைவனடி சேர்ந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் என்ற அறிவிப்புடன் எனக்குச் செய்தி கிட்டிய போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில். அப்போது மணி மூன்றரை. .நான் துவண்டு
சோர்ந்த போதெல்லாம் அன்பு நீர் தெளித்து என்னை துளிர்க்கச் செய்த அந்த அன்பு .தெய்வமான பேராசிரியரின் முகமலரைக் கூடக் காணும் பேறு பெறாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறேன். அவர் இறுதியாக கையொப்பமிட்டது என் முனைவர் பட்ட அறிக்கையில்.என்பதும் அவர் இறுதியாக்ச் சொற்பொழிவு ஆற்றிய மாநாடு எங்கள் அமைப்பான பைந்தமிழ்ச்சோலையில்தான் என்பதும் எண்ணும்போதெல்லாம் கண்ணீர் வரியிடுகிறது கன்னங்களில்.
அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது “அடப் போம்மா’ என்னத்தக் கட்டிக்கிட்டுப் போகப்போறோம்; நீ உத்தரவு போடும்மா; நான் செய்து முடிக்கிறேன். இங்கு நீதான் தலைவி. நான் உன் அடிமை” என்றெல்லாம் விளையாட்டாகச் சொலவதுடன் வேண்டிய அனைத்தையும் எனக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் செய்து அவர்களை மகிழ்வித்த அன்பின் இருப்பிடம் அவர்.
“எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வாம்மா... நான் சொல்லச் சொல்ல நீ எழுதி முனைவர் பட்ட ஆய்வேட்டை ஒப்படைத்து விடும்மா” என்று ஆயிரம் முறை கூறிய அந்த அன்பை எப்படி மறப்பது?

- Aathiraa's blog
- Login or register to post comments
- 1306 reads
கருத்துகள்
தங்கள் துயர் பகிர்வில்
தங்கள் துயர் பகிர்வில் இணைகிறேன்.
உங்கள் ஆசிரியரின் வழிகாட்டல்
என்றும் அவரை நினைவூட்டும்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
துயரில் பங்கெடுக்கிறோம்.
துயரில் பங்கெடுக்கிறோம். அன்னார் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஆசிரிய பணி உன்னத பணியாக
ஆசிரிய பணி உன்னத பணியாக கருதப்பட்டாலும் ஆசிரியர்களை மதிப்பவர்கள் பொதுவாக மிக குறைவு. உங்கள் ஆசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவராக இருந்திருக்க வேண்டும். இத்தனை அன்பான மாணாக்களை அவர் எங்கிருந்தாலும் வாழ்த்திக்கொண்டு தான் இருப்பார்.
அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்! அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆற்றொனா துயரமே! அன்னாரின்
ஆற்றொனா துயரமே! அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்! நல்லவர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்களின் மனங்களில் வாழ்கின்றார்கள்!










