சூரியன் பிரகாசிக்கும் வெட்டா வெளியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுக்கிடக்கிறது.சூரியஒளி அதன்மேல் பட்டுப் பிரதிபலித்து,அருகிலிருக்கும் ஒர் இருட்டறைக்குட் சென்று சுவற்றில் படுகிறது,கண்ணாடியிலிருந்து இருட்டறையின் உட்சுவற்றிற் படும்வரையில் உள்ளது சூரியனது ஒளிக்கதிர்.இந்த ஒளிக்கதிர் உதவியால் அந்த இருட்டறையில் உள்ள பொருளை ஒருவன் காணமுடிகிறது.இந்த ஒளிகதீர்வீச்சு அறையின் சுவற்றில் படும்போது கண்ணாடித்துண்டின்உருவம் எதுவே அவ்வுருவ முடைய தாகவேதான் காணப்படுகிறது,ஆனால் வெட்டா வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனது நேர் ஒளியோ மூல ஒளியோ அகண்டமாய்,எங்குமாய்,ஏகமாய்,உருவ எல்லை ஏதும்மற்றுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது,,, இதில் கொஞ்சம் கவனம் தேவை,,,
வெட்டா வெளி சூரிய ஒளி போன்றதே நம் இருப்புணர்வான ஆன்மா வுணர்வு,கண்ணாடியிலிருந்து அறையின் உட்சுவர் வரையிலும் நீண்டுள்ள ஒளி க்கிரணம் போன்றதே மன அறிவு அல்லது தேகாத்மபுத்தியாகிய அகந்தையுணர்வு.சூரியனது பரந்த நேர் ஒளிபோல் எல்லை குறிப்பிட முடியாத்தால் ஆன்மா உணர்வுக்கு உருவ உபாதி யில்லை,,, கண்ணாடியின் அளவையும்,வடிவத்தையும் போல தேக அளவாகவும்,வடிவாகவும் நான் என்று உணரப்படுவதால் அகந்தைக்கு ஒர் எல்லையும்,வடிவமும் உண்டாகிவிடுகிறது,இப் பிரதிபலன ஒளியே உபயோகித்து அறையினுள் உள்ள பொருள்களை அறிவது போல இம் மன அறிவை உபயேகித்தே உடல் உலகம் அறியபடுகிறது,
இது தொடரும் 
- AANMEKAN's blog
- Login or register to post comments
- 394 reads
கருத்துகள்
உண்மையாகவா?
உண்மையாகவா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ம்ம் புரிந்தது
ம்ம் புரிந்தது
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அதையும் சொல்லுங்க
அதையும் சொல்லுங்க
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ஒரு சந்தேகம்: விழக்கமா?
ஒரு சந்தேகம்: விழக்கமா? விளக்கமா? [விளக்கம்தான்]







