VISWAM's படம்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்

ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன்

ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்.

பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு

இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டைத் தரையில் போட்டு காலால் நசுக்கி

அந்த அழுக்கான நோட்டைக் காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்

அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார்:-

“கேவலம் ஒரு 500 ரூபாய்த் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும்

அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால்

மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும்,

தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே

தாழ்த்தி கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும்

குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்கள்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர்

தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்க்கை என்ற பயிருக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் தான்

உரமும் பூச்சிக்கொல்லிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.

நீங்க என்ன சொல்றிங்க நண்பர்களே ???

நன்றி : Ravi Shankar

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

yarlpavanan's படம்

நிலவு தேய்ந்தாலும்


6

நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வெண்மை தான்...
கருமுகில்
மூடிமறைத்தாலும் ஓடிவிலகினாலும்
வானம் எப்பவும் நீலமே...
வாழ்க்கையில் மனிதன்
தன்னைக் குறைத்து மதிப்பிடுவது
நல்லதிற்கு இல்லைப் பாரும்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

நன்றி


நன்றி