muralee's படம்

லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்

1842 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் 1947ஆம் ஆண்டு வரை இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்

சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே

சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.

2010 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை- 4, திங்கள் கிழமை -4, செவ்வாய்க் கிழமை -4, புதன் கிழமை -4, வியாழன் கிழமை -4, வெள்ளிக் கிழமை -4, சனிக் கிழமை -4. இப்படி கிழமைகளின் சமவாய்ப்பு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

நல்ல தகவல்


நல்ல தகவல்

dharshi's படம்

தெரியாது தெரிந்து கொண்டேன்


தெரியாது தெரிந்து கொண்டேன் நன்றி..!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

நன்றி..நண்பரே!


நன்றி..நண்பரே!