இராகுகாலம், எமகண்டம் நேரங்களில் விசேட நிகழ்ச்சிகளைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே? அதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
பூமியானது ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும், அவ்வாறு சுற்றிவரும் போது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வடதிசையை நோக்கிச் தாழ்கிறது அவ்வாறு சுழலும் போது மனிதனின் எண்ண அலைகள் அத்திசையை நோக்கி ஈர்க்கப்படும், அந்த நேரத்தில் மனித எண்ணம் சற்று மந்தமாகச் செயல்படும், சுறுசுறுப்பு சற்று குறைவாகவே இருக்கும், அந்தக் குறிப்பிட்ட காலங்கள் தான் இராகுகாலம். எமகண்டம் என அழைக்கப்படுகின்றன, ஆகவே அந்த நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நாம் சுப விசேட நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்