கிருஷ்ணதேவராயரின் அரசவையில் தெனாலி ராமன் என்ற ஒருவர் இருந்தாரல்லவா?அவருக்கு இன்னொரு பெயர் "விகடகவி".
விகடங்கள் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கவிஞன் என்பது அதன் பெயர் விளக்கம்.
கொஞ்சம் விளக்கமாக சொன்னால், உங்களது தவறை மற்றவர் நகைக்கும்படியும்,உங்களுக்கு உறைக்கும்படியும் நயம்பட உரைப்பது
விகடம்.
ஆக விகடப் பேச்சின் நோக்கம் சிரிக்க வைப்பதல்ல. ஒரு செய்தியை மறைபொருளுடன் சூசகமாக உரைப்பதுவே
ஆகும்.அனுபவிப்பவர்கள் ஆனந்தமடைவார்கள்.ஆராய்பவர்கள் எரிச்சல்படுவார்கள்.
நேற்று ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் லியோனி அவர்கள் சொன்ன ஒரு குட்டிக் கதை இந்த கட்டுரைக்கு
ஒரு மேற்கோளாக இருக்கும் என நம்புகிறேன்.
ஒரு ஊருல பரமசிவன் அப்டின்னு ஒருத்தர் இருந்தார்.
அந்த ஊருக்குள்ள எதாவது பிரச்சினை வந்தாலோ, அல்லது யாருக்காவது
எந்த விஷயத்துலயாவது சந்தேகம் வந்தாலோ இவருகிட்ட தான் கேட்பாங்க.
எதையுமே தெரியாதுன்னு சொல்ல மாட்டார். எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்பார்.அதனால அவருக்கு ஊரில "பதில் சொல்லி பரமசிவன்" அப்டின்னு ஒருபட்டப் பெயர் இருக்குது.
ஒரு நாள் அவரு பேருந்து நிலையத்துல நின்னுகிட்டு இருந்தார்.இரவு 10 மணி. இவரைப் பத்தி தெரியாத ஆசாமி ஒரு சந்தேகம் கேட்க அவருகிட்ட வந்தார்.உரையாடல் இதோ!
அவர் : "ஐயா! இதுதான் கடைசி பஸ்சா?
ப.சிவன்: இல்லைங்க, நாளைக்கு காலையில ஒரு வண்டி இருக்கு.
அவர் : அட அது இல்லங்க! இந்த பஸ்சுக்கு முன்னாடி ?
ப.சிவன்: இந்த பஸ்சுக்கு முன்னாடி ரெண்டு Head light இருக்கு.
அவர் :(கோபத்தோடு ) இதுக்கு பின்னாடி?
ப.சிவன்:ரெண்டு Danger light இருக்கு.
(வேறு மாதிரி கேட்க நினைத்த அவர்)
அவர் :இந்த பஸ்ஸ விட்டா ?
ப.சிவன் :விட்டா போய்டும்!
வந்தவர் கடுப்போடு போய்விட்டார்
இது நமக்கு சிரிப்பினை வரவைக்கிறது. ஆனால் சந்தேகம் கேட்டவருக்கு?
இது போல நடைமுறையில் பல நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்.
அவைகள் நமக்கு நடக்கும் வரை வேடிக்கையாகவே தெரிகிறது.
சிரிக்கிறோம்,விகடன்களை அளவுகடந்து ரசிக்கிறோம்.
"லொள்ளு சபா",சந்தானம் வசனங்கள் என அனைத்துக்கும் நமது ஆதரவுகளை அளித்து வெற்றிபெற செய்கின்றோம்!
ஆக, மொக்கைகள் என அசிங்கப்படுத்தப்படும் இந்த நகைச்சுவை துணுக்குகளை கேலி செய்யாமல் மனதார நாம் இனி ரசித்துப் பழகுவோம்!
அழுவதற்கு நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.சிரிப்பதற்கு அப்படி வாய்ப்புகள் அதிகம் இருப்பதில்லை.
- greatppr's blog
- Login or register to post comments
- 281 reads
கருத்துகள்
நல்ல தகவல் “அழுவதற்கு நம்
நல்ல தகவல்
“அழுவதற்கு நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.சிரிப்பதற்கு அப்படி வாய்ப்புகள் அதிகம் இருப்பதில்லை.” 
நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil













