chandru2110's படம்

முதலில் மின்னியல் கழிவுகள் ( Electronic Waste) பற்றிய எனது அறிவின் குரு திரு.பீ.பார்த்தசாரதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்னியல் கழிவுகள் (E-Waste) என்பது உபயோகப்படுத்தப்பட்ட மின்னியல் பொருட்கள் ஆகும். அவை கழிவுகள் நிலைக்கு வரக் காரணம் ஒன்று அவை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்க வேண்டும் அல்லது உற்பத்தியாள‌ரால் கொடுக்கப்பட்ட காலம்( நல்ல நிலையில் இருந்தாலும்) முடிந்திருக்க (Expiry) வேண்டும்.
மின்னியல் கழிவுகள் நாம் பயன்படுத்தும் போது சாதுவாக இருந்தாலும், அதனை மறுசுழற்சி (Recycle) செய்யும் போது மிக கொடிய நச்சுத் தன்மை( Hazardous) வாய்ந்த பொருட்களை வெளியிடுகிறது. இந்த ந‌ச்சு பொருட்கள் (hazards)உயிரினங்களால் உட்கொள்ளப்படும் போது உடலினுள் ரசாயண மாற்ற‌த்தை ஏற்படுத்தி புற்று நோய் போன்ற நோய்களை உண்டாக்கும்.
அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு ( Environmental Protection Agency-EPA ) கணிப்பின்படி,இதுவரை அமெரிக்காவில் விற்றுள்ள மின்னியல் சாதணங்களில் மூன்றில் ஒரு பங்கு செயலிலந்து உபயோகமில்லாமல் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது.அது மட்டும் அல்லாமல் 4.6மில்லியன் டன்கள் மண்ணில் புதைக்கப்பட்டது (Land filled ).
மின்னியல் கழிவில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் ஐரோப்பிய நாடுகள் அதை மண்ணில் புதைக்க கூடாது என்று முடிவெடுத்தனர். ஏனென்றால் மண்ணில் புதைக்கப்படும் போது இடத்தை குறைக்க(Volume Reduction ) செய்ய‌ அவை நொறுக்கப்படும்போது (Incineration ) ,அதிலிருந்து வெளிபடும் நச்சுத்தன்மை வாய்ந்த காரியம்( Led ), பாதரசம்( Mercury ), பாஸ்பர் மற்றும் காட்மியம் போன்ற பொருட்கள் காற்றில் கலக்கின்றன.மற்றும் புதைக்கப்பட்டபின் இதில் உள்ள அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் நிலத்தடி நீரில் கலக்கிறது.
மின்னியல் கழிவுகளில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் அவை வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது_ செய்யப்படுகின்றன. இதில் மறுசுழற்ச்சிக்காக சைனா,இந்தியா,பகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளுக்குதான்அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதை அறிந்த சைனா , இறக்குமதியை தடுக்க 2000ம் ஆண்டில் சட்டம் கொண்டுவந்தது. இருப்பினும் தடுக்கமுடியவில்லை. இன்று உலகின் மின்கழிவுகளை அதிகம் மறுசுழற்சி செய்யும் நாடுகளில் சைனாவுக்குதான் முதலிடம்.
ஆணால் 1990ம் ஆண்டு வாக்கிலேயே ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டிலேயே மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்களை அமைத்தன.
மின்கழிவுகளை பொறுத்தவரை தற்போது மூன்று அடிப்படை கொள்கைகள் உலக நாடுகளால் பின்பற்றப்படுகிறது.
அவை 1.குறை( Reduce ) 2.மறு பயன்பாடு(Recovery ) 3.மீள்சுழற்சி(Recycle ).
1.குறை:மின் மற்றும் மின்னியல்(Electrical&Electronics ) சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும்.இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிற்க வேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும்.
2.மறு பயன்பாடு: மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரி செய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும்.
3. மீள்சுழற்சி: மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிருந்து மூலப் பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வள‌ங்களையும் பிரித்தெடுக்க வேண்டும்.அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில் நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க‌ வேண்டும்.

இப்பொழுது இந்தியாவில் மின்னியல் கழிவுகள் பற்றிய விழிப்புண‌ர்வு அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் நிறுவண‌ங்கள் தங்கள் இஷ்டம்போல் எந்த கட்டுபாடும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் மின்னியல் கழிவுகளை விற்றுக் கொண்டிருந்தன‌. இதனால் மிகப்பெரிய சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.
எப்படியென்றால் மாசு கட்டுபாட்டு வாரியங்களால் அங்கீகரிக்கப்படாத சாலையோர மறுசுழற்சியாள்ர்கள் (Backyard Recycler ) மின்னியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும்போது, எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் விதிகளை கடைபிடிக்காமலும் செய்வதால் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாலர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் மிக அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது.
இதையறிந்த நடுவன் மற்றும் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் ( Central and State Pollution Control Boards ) மின்னியல் கழிவுகள் விசயத்தில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதன் முதல்படி நிறுவண‌ங்கள் தங்கள் கழிவுகளை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவண‌ங்களுக்கு மட்டும் மீள்சுழற்சிக்காக‌ வழ‌ங்கவேண்டும்.
முதலில் மக்களுக்கு விழிப்புண‌ர்வு ஏற்பட வேண்டும். மக்கள் தங்களுடைய மின் மற்றும் மின்னியல் கழிவுகளை பொது கழிவுகளில் ( Municipal Waste ) கலக்காமல் தனியாக மறுசுழற்சிக்கு கொடுக்க வேண்டும். அதற்காக இன்னும் சில நாட்களில் மின்னியல் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டிகள் (e-waste bin) தொண்டு நிறுவண‌ங்களின் உதவிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
நண்பர்களே மின்னியல் கழிவுகள் ( Electronic Waste ) பற்றிய உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், என்னால் முடிந்தவரை தீர்க்கிறேன்.

8
Your rating: None Average: 8 (2 votes)

கருத்துகள்

dharshi's படம்

நல்ல தகவல்


நல்ல தகவல்

மீள்சுழற்சி செய்ய முடியாத மின்னியல் கழிவுகள் ஏதும் உள்ளனவா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

ஊக்கத்திற்கு ந‌ன்றி


என் அனுபவத்தில் அப்படிப்பட்ட மின்னியல் பொருட்களை பர்த்ததில்லை. ஆனால் அதிக அபாயம் உள்ள மின்னியல் கழிவு என்றால் அது பிரிண்டரில் உள்ள டோனர் கார்ட்டரேட்ஜ் பவுடர் ஆகும். அதில் உள்ள காரியம் (lead-Ph ) மிகவும் அபாயமானது.


சந்துரு


dharshi's படம்

அது எந்த வகையில் சூழலை


அது எந்த வகையில் சூழலை பதிக்கிறது? அதன் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகள் என்ன?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

காரியம்


காரியம் மிகவும் அபாயகரமானது. அது மனிதர்களால் சுவாசிக்கப்படும்போது நுரையீரலில் படிந்து நுரையீரல் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. உணவில் கலந்தால் வயிறு ம‌ற்றும் ரத்தத்தை பாதிக்கும். அதனால் தான் led free petrol போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நம்மை பாதுகாத்துக்கொள்ள டோனர் கார்ட்டரேட்ஜை திறந்த வெளியில் திறக்க கூடாது. ரீ ஃபில்லீங் செய்யக் கூடாது.மீள்சுழற்சி நிறுவனங்களில் அதற்கென்று முற்றிலும் மூடப்பட்ட கேபின்களில் வைக்கப்பட்டு 20mm of nagative water preasure ல் திறந்து கார்ட்டரேட்ஜ் பவுடர் வெளியேற்றி லேண்ட் ஃபில்லீங் செய்யப்படும்.


சந்துரு


dharshi's படம்

சரியான பதில்


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நன்றி


என் ஒன்றரை வருட அனுபவம். நிச்சயம் சரியாக இருக்கும்.


சந்துரு


dharshi's படம்

உங்கள் அனுபவங்களை தொடர்ந்து


உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நிச்சயம்


எனக்கு தெரிந்ததை தெளிவுப்படுத்துகிறேன்.


சந்துரு


su.senthilkumaran's படம்

நல்ல கட்டுரை சந்த்ரு .


நல்ல கட்டுரை சந்த்ரு . தகவல்கள் அ'பாரம்'!

chandru2110's படம்

நன்றி


ஊக்கத்திற்கு நன்றி.


சந்துரு


vinoth's படம்

நல்ல கட்டுரை .


நல்ல கட்டுரை .


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

நன்றி


பாராட்டுக்கு நன்றி.


சந்துரு


selva_red's படம்

நல்ல கட்டுரை சந்த்ரு


நல்ல கட்டுரை சந்த்ரு

chandru2110's படம்

நன்றி


பாராட்டுக்கு நன்றி


சந்துரு


paramaswari's படம்

பயனான த்கவல்கள் நண்பரே!


பயனான த்கவல்கள் நண்பரே!

chandru2110's படம்

நன்றி


பயனாகட்டும்.


சந்துரு


VINOTHKUMARkvk's படம்

"GOOD INFORMATION"


It is very useful information.i got it.Thank You Very Much ...............

chandru2110's படம்

நன்றி


கருத்துக்கு நன்றி.


சந்துரு


kumaran's படம்

சந்துரு ,நீங்கள்


சந்துரு ,நீங்கள் கூறியிருப்பது மின்னியல் கழிவா? மின்னணுவியில் கழிவா? அதாவது,electrical waste,electronic waste இரண்டுமா?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


chandru2110's படம்

நல்ல கேள்வி


நான் கூறியது முக்கியமாக மின்னணுவியில் கழிவுக்குதான்.
மின்னியல் பொருட்களும் 90% இதில் அடங்கும். ஏனென்றால் எல்லாவற்றிலும் ஓரள‌வுக்கு சர்க்யூட்ஸ் உள்ளது.
மொழிபெயர்ப்பில் ஒன்று மட்டும் கூறியுள்ளேன்.
கேள்விக்கு நன்றி.


சந்துரு


kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

அருமையான பதிவு. மேலும்


அருமையான பதிவு. மேலும் சந்தேகத்திற்கு பதில் கூறிய விதமும் அருமை. வாழ்த்துக்கள்.

chandru2110's படம்

ந‌ன்றி


தங்கள் வாழ்த்துக்கு ந‌ன்றி ஐயா.


சந்துரு


ranjitsachin's படம்

நல்ல கட்டுரை சந்துரு...


நல்ல கட்டுரை சந்துரு... மிகவும் அருமை....

chandru2110's படம்

நன்றி.


நன்றி.


சந்துரு


spsraj's படம்

அருமை


அருமையான கட்டுரை!!


தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.


chandru2110's படம்

நன்றி.


நன்றி.


சந்துரு