செத்துப்போன மனிதத்தை புதுப்பிக்கத் துடிக்கும் மனிதன். எங்கே தொலைத்தோம் இல்லை அழிந்து போனதா? அழிக்கப்பட்டு விட்டதா! இல்லை புதைந்து போனதா? இடுக்கண்களையும் நட்பின் இலக்கணம் ஏட்டுச்சுவடி மட்டுமா? மனிதத்தின் போர்வையில் சுயநலத்தின் நரிகள். தனது வளர்ச்சிக்கு பகடை காய்களாய் மனிதாபிமானம். நிரந்தரமாய் தேவை ஒரு அவசரத் தீர்வு. மனிதா பொறுத்தது போது்ம்! சிவந்து எழு! மனிதம் வாழ! மனிதனாய் வாழ!




