உளுந்து பொங்கல் பித்தத்தை தணிக்கும்.இருமலைக் குணமக்கும்.உடலுக்கு வன்மையூட்டும்.
மிளகுப் பொங்கல் குடலிரைச்சல்,வாயுப் பொருமல்,மிகுபித்தம், சளி ஆகியவற்றைப் போக்கும்.பசியைத் தூண்டும்.
புளிப் பொங்கல் சுவையின்மை, வாந்தி, பித்தத்தை அகற்றும்.
எள்ளுப் பொங்கல் உடலில் வலிவைச் சேர்க்கும்.உடலை மினுமினுப்பாக்கும்.வாத பித்தம் அகற்றும்.
பால் பொங்கல் வாதத்தை உண்டாக்கும்.உடல் அசதி நீங்கும்.
கடுகுப் பொங்கல் வாதத்தை அதிகப்படுத்தும்.
பருப்புப் பொங்கல் பித்தத்தை நீக்கும்.வாதத்தைப் பெருக்கும்
சர்க்கரைப் பொங்கல் சுவையின்மையை நீக்கும்.வாந்தி பித்தத்தைச் சமப்படுத்தும்.
தயிர்ச் சோறு உடல் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைப் போக்கும்.உடலைக் குளிர்ச்சியுடன் வைக்க உதவும்.

(1 vote)



