மன்னிக்கவும் நண்பர்களே!
தாங்கள் செய்த பதிவுகளுக்குச் சான்றாக தங்களது இணைய முகவரிகளைத் தரலாம். wall post இல் தலைப்பைத் தந்த பின் மிகுதியைப் படிக்க தங்களது இணைய முகவரியை click செய்யுமாறு கேட்பது அழகில்லை.
அது 'தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களைத் தங்கட பக்கம் வா' என்று பிச்சை கேட்பது போலத் தெரியவில்லையா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சிறந்த பதிவுகளைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்த பின், அதற்குக் கீழே தங்களது இணைய முகவரிகளைக் குறிப்பிட்டால் அழகாக இருக்காதா?
நானும் பல தளங்களில் உறுப்பினர் தான். எந்த ஒரு தள உறுப்பினரையும் என் பக்கம் வா என்று அழைத்ததில்லையே! அது எனது புலமைக்கு இழுக்கு எனக் கருதுகிறேன்.
ஆகையால், எனது படைப்பைப் பதிகிறேன்; படைப்பின் தரத்தை முன் நிறுத்தியே வாசகர்களும் நண்பர்களும் என்னுடன் இணைகிறார்கள்.
அது போல உங்கள் திறமையைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் வெளிப்படுத்துங்கள். பதிவிடுவது மட்டுமன்றி மாற்றார் பதிவிற்குக் கருத்துத் தெரிவிப்பதிலும் உங்கள் திறமை வெளிப்படுமே. அது தான் உங்கள் தள வாசகர்களைப் பெருக்க உதவும். அதுவே இலக்கிய நேர்மையும் ஆகும்.
இனிய நண்பர்களே!
தங்களது சிறந்த பதிவுகளைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்யாமல்; பதிவின் தலைப்புகளை wall post இல் இட்டு; மிகுதியைப் படிக்க தங்களது இணைய முகவரியை click செய்யுமாறு தங்களது இணைய முகவரியைப் பதிவிடுவது 'தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களைத் தங்கட பக்கம் வா' என்று பிச்சை கேட்பது போலத் தான் வெளிப்படும்.
சில தளங்களில் இவ்வாறு அழைப்பது அல்லது மின்னஞ்சல் ஊடாக 'தங்கட பக்கம் வா' என்று அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளதோடு உறுப்பினர் நிலையையும் நீக்குகிறார்களே!
இணையப் பதிவுகளால் நான் நற்பெயரெடு்க்க உதவிய, எனது தாய்த் தளமான தமிழ் நண்பர்கள் தளத்தின் பழமையும் பெருமையும் நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டி வராது. ஏற்கனவே, நீங்களே அறிந்திருப்பீர்களே!
நண்பர்களாகிய நாம் ஒன்றிணைந்தால் தான் தமிழ் நண்பர்கள் தளத்தை இன்னும் மேம்படுத்தலாம். எனது பதிவு எவரையும் புண்படுத்தினால் என்னைத் தண்டிக்கவும்.
- yarlpavanan's blog
- Login or register to post comments
- 449 reads
கருத்துகள்
பொட்டில் அடித்தார் போல்
பொட்டில் அடித்தார் போல் சொல்வது என்பது இப்படித்தானா? 
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
அன்புள்ள நண்பர் யாழ்பாவாணன்
அன்புள்ள நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கு,
தாங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கரையுமே இவ்வாறு எழுத வைத்துள்ளது என்பதை உணர்கிறோம்.
தமிழ் நண்பர்கள் தளத்தில் இரண்டு வகை பதிவுகள் உள்ளது. ஒன்று முதன்மை பதிவுகள், இரண்டு சுவர் பதிவுகள் (wall posts/ status updates), இவற்றில் முதன்மை பதிவுகளில் முழுபதிவும் பதிய கட்டாயப்படுத்துகிறோம். இங்கே முழு பதிவையும் இட்டு அவரவர் தங்கள் வலைதளத்தின் முகவரியையும் இட உரிமை உண்டு.
அதே சமயம் முதன்மை பதிவில் பதிவின் சிறிதை மட்டும் பதிந்து மேலும் தொடர்ந்து படிக்க வலைப்பூவிற்கு அழைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
பல பதிவர்களும் தங்கள் வலை தளத்தை மெருகூட்டவும், சிறப்பாக வளர்க்கவும் விரும்புவது இயற்கையே. அவர்கள் பதிவை பல நண்பர்களும் வந்து படித்து கருத்து சொல்வதையே சிறந்த பரிசாக எழுத்தாளர்கள் நினைப்பார்கள்.
இதற்காகவே, தமிழ் நண்பர்கள் தளத்தில் சுவர் பதிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அவரவர் தங்கள் பக்கத்தில் அவரவர் விரும்பிய சிறு செய்திகளையோ தங்கள் வலை முகவரிகளையோ, அல்லது பதிவின் சிறிதை மட்டும் போட்டு மீதியை படிக்க வலை முகவரியையும் இட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் நண்பர்கள் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் வசதி ஆகும்.
இதை மற்ற பதிவுத்திரட்டிகள் போல செயல்படுத்தி வருகிறோம். இதை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேலைகள் நிறைவு பெற்றதும் வெளியிட உள்ளோம்.
நன்றி.
தமிழ்,
தமிழ் நண்பர்கள் சார்பில்,
http://tamilnanbargal.com
tamilnanbargal.com
யாழ்பாவாணனின் கருத்துக்கள்
யாழ்பாவாணனின் கருத்துக்கள் ஏற்புடையனவாக இருக்கின்றன. நானும் அவரை ஆதரிக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் தமிழ் நண்பர்கள் தளம் இன்னும் சிறப்படையும். தனித்து இயங்கி பெயர் பெறுவதைப் பெரிதாகக் கருதாமல் ஒன்றாக இணைந்து இயங்கி தமிழ் நண்பர்கள் தளத்தை மேலும் வலுப்படுத்துவோமே. இறுதியில் நன்மை அடையப் போவது நாம்தானே.
"முடிவாகச் சொல்வதற்கு
"முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. பதிவர்களுக்கு ஒழுக்கம் தேவை. அதாவது, விளம்பரம் இன்றி பதிவின் தரத்தால், வாசகர்கள் மத்தியில் விருப்பம் அதிகரிக்கப்பட்டுப் பிரபலமாவதைப் பின்பற்றாலாம். அவ்வாறானவர்கள் சுவரில் (wall posts) குறும் செய்தி, தத்துவங்கள், வழிகாட்டல்கள், ஓரிரு வரிக் கவிதைகள் எனப் பல பதிவுகளைப் பதியலாம். மேலும், சுயவிவரப்(Profile) பதிவில் அவரவர் இணையத் தளங்களின் எல்லா முகவரிகளையும் பதிவு செய்யலாமே."
ஐயா பொன்வண்ணனின் கருத்துக்கு எனது ஆதரவுகள். அன்பர் யாழ்பாவாணரின் ஆதங்கம் தமிழ்நண்பர்களின் தளம் சிறப்படைய வழிவகுக்கக் கூடியதே எனவே நமது தமிழ்நண்பர்கள் தளம் சிறப்படைய நாம் ஓரணியாய் நிற்போம்!
திரு யாழ்பாவாணன் கருத்துகளை
திரு யாழ்பாவாணன் கருத்துகளை ஏற்கிறேன்.
தமிழ் நண்பர்கள் சார்பில் சொல்லப்பட்ட கருத்து நடப்பின் பதிவர்களின் பொதுவான இயல்பு. அதை தவறு என்றும் கூற இயலவில்லை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வணக்கம் நண்பரே,..... நான்
வணக்கம் நண்பரே,.....
நான் எழுதிய " என்னுடன் வாழ்ந்திட வா....அன்பே" என்ற கவிதையில் நான் விளக்கத்திற்கு கொடுத்த முகவரிக் கொணடு தாங்கள் இந்த பதிவினை எழுதியுள்ளீர்கள்... மிகவும் நன்றி........
நான் ப்ளாக் பதிந்துள்ளேன்... வந்து ரேட்டிங போடச் சொல்லி யாரிடமும் சொல்லவுமில்லை... பிச்சை ஏந்தவுமில்லை....பிச்சை கேட்டு என் பதிவுகளை பிரபலப்படுத்தும் எண்ணமும் சிறிதும் இல்லை..... . மேலும் அந்த கவிதைகள் எல்லாம் "தமிழ் நண்பர்கள்" தளத்தில் பதிந்தவை தான்...... அதன் இணைய முகவரி பெரிதாக இருந்த்தால் தான் என் ப்ளாக் முகவரி கொடுத்தேன்..... ஏற்கெனவே கவிதை பெரிய அளவாகிவிட்டதால் தான்....மேலும் என் தளத்திற்கு புகழும், ரேட்டிங்கும் எதிர்ப்பார்க்கும் அளவு திறமையும், எனது பெயருக்குப் பின்னால் தளத்தின் முகவரியை சேர்த்து அதனை பிரபலப்படுத்தும் அளவு பதிவுகளைப் போட நான் தங்களைப் போன்ற பெரிய பதிவாளரும் இல்லை.....
எனக்கு இணையத்தில் எழுத்து ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த தமிழ் நண்பர்கள் தளம் தான்.......... இத்தளத்தின் பெருமையையும், பழமையையும் கெடுக்க வேண்டி கண்டிப்பாக நான் என் ப்ளாக் முகவரியைச் சேர்க்கவில்லை.......
மேலும் என் எழுதிய என் பதிவில் அக்கவிதைக்கான் " தமிழ் நண்பர்கள் தளத்தின் முகவரியைச் சேர்த்துவிட்டேன்..... தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே
வணக்கம் நண்பரே, எனது
வணக்கம் நண்பரே,
எனது கருத்திற்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி........ இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை...... ஆனாலும் உங்களுக்கு " லொள்ளு" ஜாஸ்தி............... நான் உங்கள் பதிவுகளை எல்லாம் தெரிந்து தான்... தங்களைப் பெரியவர் என்றேன்.... ஆனால் நீங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வைத்து என்னை வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்துகிறீர்.......
நான் இத்தளத்தில் பதிந்துள்ள பதிவுகள் அணைத்திலும் கவிதைகள் (தப்பு தப்பு கவிதைகள் அல்ல, கிறுக்கல்கள்_ மட்டுமே எனது சொந்த படைப்பு..... நான் அதனை இத்தளத்திலேயே ஏற்கெனவே சொல்லியுள்ளேன்.......
எனக்கு ஒரு பழக்கம் அதுவென்னவெனில் இணையத்தில் உலாவும் போது என்னை கவர்ந்த விஷயங்கள் எதுவாயினும் அதனை கணிப்பொறியில்
Ms- Word, Excel இவற்றில் காப்பி செய்து சேமித்து வைத்துவிடுவேன்..... ஓய்வு நேரங்களில் அதனை மீண்டும் படித்துப் பார்ப்பேன்.... எனில் எனக்கு நினைவுத் திறன் கம்மி தான்...... சொந்தமாக பதிவுகளை எழுதும் அளவிற்கு நம் கற்பனைத் திறன் வளரவில்லை..... தங்களின், பொன்வண்ணன், மேலும் இத்தளத்தில் சிறந்த பதிவர்களின் சொந்த பதிவைக் காணும் போது எனக்கு மனதில் எழுத வேண்டும் என்ற ஆவல் வரும்..... ஆனால் அதனை மேம்படுத்த, வளர்க்க வழியில்லை....
முடிந்தவரை.... எனக்குத் தெரிந்திருந்தால் பதிவுகளின் கீழ் அதன் ஆக்கத்தினை தெரிவித்து இருப்பேன்..... மேலும் என்க்கு பயனளிக்கும் என்ற விஷயங்களை மட்டுமே பதிந்துள்ளேன்........
எல்லாம் ஒரு பொது நலம் தான்னா?////////
நான் கூறிய கருத்துக்கள் ஏதேனும் தங்களை பாதித்திருந்தால் என்னை அன்புடன், நட்புடன் மன்னிக்கவும்.............
வணக்கம் நண்பர்களே, எனக்கு
வணக்கம் நண்பர்களே,
எனக்கு தெரிந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன். நமக்குள் ஏன் இந்த போட்டி, சண்டைகள். நமக்குள் சண்டை போட்டதால் தான் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம். நமக்குள் சண்டை போட்டதால்தான் நமது ஈழ உறவுகளை இழந்தோம். இது நாம் இன்னும் மாறவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நமது எண்ணங்களை எடுத்து கூறுவதற்கு எவ்வளவோ நல்ல வலைதளங்கள் இருக்கிறது. நான் கண்டவற்றுள் தமிழ் நண்பர்கள் என்ற இத்தளம் தமிழ் நண்பர்களுக்காகவே ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. இதில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளை கடைபிடித்து நமது என்னங்களை வெளிப்பத்துவோம். நாம் நமது வலைதள அறிவை வெளிக்காட்டுவதற்கு எவ்வளவோ நல்ல தளங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் திறமைகளைக் காட்டுங்கள். அதற்கு பதிலாக இங்கிருந்து நண்பர்களை இழுப்பது நல்லது அன்று.
நமது நண்பர் திரு.யாழ்பாவணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. எனவே நமது வலைதள அறிவை வெளிப்படுத நமது தமிழ் நண்பர்கள் வலைதளத்திள் நமது பதிப்புகளை வெளியிடுவோம். மாறாக நமது நண்பர்களை தனது சொந்த வலைதளத்திற்கு இங்கிருடந்து தூண்டில் போட்டு இழுப்பதை நிறுத்துவோம். நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி சுமுகமாக இருப்போம். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்














