vinoth's படம்

சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00 IST

சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? :

நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. "இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்' என்று நடிகர் சூர்யா கூறினார். "பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்' என்று விஜயகுமார் கொந்தளித்தார். "நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

"சுவாமி நித்யானந்தாருடன்' கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, "அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்' என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தினமல்ர்

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கூட்டம் போட்டு வாய்கிழிய பத்திரிகையாளர்களின் அம்மா அக்கா தங்கைகளை திட்டி தங்கள வண்டவாளங்களை உலகுக்கு காட்டிய நடிகர்கள் விவேக் எல்லாரும் இப்போ யாரைதிட்டப்போறார்கள் என தெரிவில்லையே
Smile

1
Your rating: None Average: 1 (2 votes)

கருத்துகள்

joshi2010's படம்

பத்திரிக்கையாளர்களை தாக்கிப்


பத்திரிக்கையாளர்களை தாக்கிப் பேசிய நடிகர்கள் நடிகைகள் தூய்மையானவர்கள் என்பதை நிருபிக்க முடியுமா?????????????...... நடிகைகள் நடிக்கும் போது இலட்சக் கணக்கில் வாங்கிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களின் மார்க்கெட் போய் விடும் போதும், அவர்கள் என்ன கூலி வேலைக்கு அல்லது வேறு வேலைக்கா போக முடியும்,...... இப்படி ஏதாவது பண்ணினால் தான் முடியும். இல்லை மார்க்கெட் இல்லாத நடிகைகளுக்கு/ நடிகர்களுக்கு நடிகர் சங்கம் என்ன செய்தது? என்ன செய்ய முடியும் அவர்களின் வாழ்விற்கு?

இதெல்லாம் பத்திரிக்கைகளில் அடுத்த ஹாட் நியூஸ் வரும் வரை தான்...... மக்களுக்கு இதெல்லாம் டெய்லி டீ குடிப்பது மாதிரி தான். இன்னும் எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் அவர்களையும் வாழ வைப்போம்.............. இன்னும் ஜெயிலில் உள்ள பிரேமானந்தாவை எத்தனையோ பேர் ( வெளி நாட்டவர்) உட்பட சந்தித்து ஆசி வாங்கிச் செல்கின்றனர்.............. இதெல்லாம் ஒரு பிரச்சனையா தமிழக மக்களுக்கு................. எங்களுக்கெல்லாம் டீலா நோ டீலா, செல்வி .......... பார்ப்பதற்கே நேரமில்லை,,,,,,,,,,,,, அடுத்த தெருவில் புது பைனான்ஸ் கம்பெனியும், புது சாமியார் ஒருத்தரும் வந்து இருக்காங்களாம் அவரை வேறு பார்க்கணும்.... அவர் தான் என் புருஷனுக்கு நல்ல புத்தி தரணும்...

உண்மையில் இன்றைய நாட்களில் மேலை நாட்டவர் எல்லாம் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மத வழிபாடுகளையும் உயர்வாக மதித்து இங்கு வருகின்றனர், சிலர் அதனை பின்பற்றவும் செய்கின்றனர். இது ஒரு உண்மையில் " வெட்கக் கேடான விஷயம்" தான்,


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


vinoth's படம்

நிஜமே நிலைக்கும் போலிகள்


நிஜமே நிலைக்கும் போலிகள் எல்லாமே உடைபட்டு போகும் என்பதற்கும் அதற்கு எந்த மத பேதம் என்பது இல்லை என்பதற்கும்

பிரேமானந்தா
கேரள கன்னியாஸ்திரி ஜெஸ்மியின் ஆமேன் நூல்
ஜாண் ஜோசப்
கேரள கன்னியாஸ்திரி அபயா செக்ஸ் கொலைவழக்கு
சோழிங்கநல்லூர் இம்மானுவேல்
இப்போ நித்தியானந்தா
மேலும் நாம் மறந்து போன

எல்லோரும் சாட்சிகள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...