நம்மில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நோய்தான், ஆனால் அது வந்துவிட்டால் காலம் கடந்தாலும் மரணத்தை வெல்லமுடியாது.... அதுதான் புற்று நோய்... ஆனால் புற்று நோய் வராமல் தடுக்க நாம்மால் முடியுமே.. இந்த நோய் யாரை பாதிக்கும், எப்படி பாதிக்கும்? பொதுவாக இந்த நோயானது இளைய சமுதாயத்தினரையே பாதிக்கிறது, இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பான்மசாலா, குட்கா, மது போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதை எப்படி தடுப்பது? 1). நம் பிள்ளைகளை நாம் கவனமாக வளர்க்கவேண்டாமா.. ஆம் பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை கண்கானிக்கவேண்டும். 2). 15 வயது முதல் 27வயது வரை இளைஞர்கள் தடம்பிறழ வாய்ப்புகள் அதிகம், அந்த வயதில் பிள்ளைகளை நாம் கண்காணிக்கவேண்டும். நாம் ஒரு காவலனாக, நாண்பனாக, நல்ல தாயாக, தந்தையாக மாறி பாதுகாக்கவேண்டியது அவசியம். 3) பிள்ளைகள் தவறு செய்கிறார்கள் என்று தண்டித்தால் அவர்கள் மேலும் தீவிரமாக செய்வார்கள், நாம் தான் முள்ளில் மாட்டிய சேலையை போன்று யாருக்கும் நக்ஷ்டமில்லாமல், பிரச்சனையை தீர்க்கவேண்டும். 4) 2020ல் வல்லரசை காண்போம் என்று (இளைஞர்களை மனதில் நிருத்தி)அப்துல்கலாம் சொன்னார், ஆனால் நம் இளைஞர்களோ போதை பொருட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.. 5). பள்ளிவளாகத்தைச் சுற்றி 100மீட்டருக்கு எந்தவித புகையிலை பொருட்களும், மற்ற போதைப்போருள்களும் விற்க கூடாது என சட்டம் இருந்தும், யாரும் அதை மதித்ததாக தெரியவில்லை. ஏன் அரசே சட்டம் இயற்றியதோடு சரி அதை முரைப்படுத்தவில்லை, சறியான கண்காணிப்பும் இல்லை. 6) பிள்ளைகளை திருத்த ஆசிரியர்களால் முடியாதா? கண்டிப்பாக முடியும். இப்பொழுதெல்லாம் பள்ளிகளில் உடர்பயிர்ச்சி என்பதே குறைந்துவிட்டது. முறையான உடற்பயிற்ச்சி கொடுத்து மாணவர்களின் மனதை கட்டுப்படுத்தும் திறமை ஆசிரியர்களிடமே உள்ளது. தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பார்கள்.. மாணாக்கர்களை நெறிப்படுத்தினால் பிற்காலத்தில் நம் நாட்டையே நல்ல நிலமைக்கு மாற்றிவிடலாம். 7). ஆனால் அரசையும் நாம் குறைசொல்ல கூடாது, 110 கோடியை தாண்டிவிட்ட நம் இந்திய மக்கள் தொகையில், மக்களாகிய நாம் தான் பொருப்புடன் நம்மை பதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. 8). பிள்ளையை பெற்றெடுத்த நாம் அவர்களை வளர்ப்பதிலும் மிக கவனம் செலுத்தவேண்டும், அவர்களின் நடவடிக்கை, பழக்கவழக்கங்களையும் உண்ணிப்பாக கவனிக்கவேண்டும். 9) போதைபொருட்களின் நன்மையையும் தீமையையும் விளக்கமாக எடுத்துக்கூறி புறியவைக்கவேண்டும். அவர்கள் தவறுசெய்ய முனைந்தால் அவர்களுடைய நண்பர்கள் மூலம் திருத்த முயற்ச்சி செய்யலாம்.. (ஆனால் அந்த நண்பர்களும் நல்லவர்களாக இருக்கும்பட்சத்தில்). 10) பான்மசாலா பயன்படுத்தும் பழக்கம் பொதுவாக வட இந்தியர்களிடமிருந்துதான் தமிழகம் வபந்ததாக ஒரு தகவல். வட இந்திய கலாச்சாரம் நமக்கு தேவையில்லையே.. இதை நம் பிள்ளைகளுக்கு நாம் புரியவைக்கலாமே. 11) சில காலங்கலாக நம் இளைஞர்கள் நாக்கின் அடியில் ஒரு வித புகையிலையை அடக்கி வைத்துக்கொள்கின்றனர், பலர் பன்பராக்கை வயில் குதப்பி எச்சிலை கண்ட இடங்களில் துப்பிவைக்கின்றனர். 12) போதை வஸ்துகளால் மட்டும் இந்த நோய் வருவதில்லை, அதை பயன்படுத்துபவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் தொற்ற வாய்ப்புகள் மிக மிக அதிகம். 13) இந்த நோயானது வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை, புழுதி போன்றவற்றாலும் வாய்ப்புகள் அதிகம், இவற்றிலிருந்து தப்பிக்க நாம் மூக்குக்கு ஒரு கவசம் அனிந்து செல்லலாம், நம்மை பார்ப்பவர்கள் எள்ளி நகையாடுவார்களே என்று நாம் அச்சம் கொன்டால் நம் வாழ்க்கையை இழக்க நேரிடும். 14) தினமும் நாம் சாப்பிடும் உணவுகளை ஆரோக்கியமானதாகவும், வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதாகவும் மாற்றியமத்துக்கொள்ள வேண்டும். நன்பர்களே முடிந்தால் ஆம்வே என்கிற நிருவனம் சில சத்தான பொருட்களை தருகிறது முடிந்தால் வாங்கி பயன்படுத்திப்பாருங்கள். 15) நம் வாழ்க்கை நம் கையில்தானே உள்ளது. நாம் தானே நிர்ணயிக்கவேண்டும், ஆரோக்கியமாக வாழ சில நூறு ரூபாய்களை நாம் சிலவழித்தால் தப்பில்லையே 16) ஒரு இளைஞன் ஒரு நாளுக்கு போதைபொருட்களுக்கு சிலவு செய்வதை உடல் ஆரோக்கியத்திற்க்கு செய்யலாமே... அதை நம்மால் மாற்ற முடியாதா? முயன்று பருங்களேன்.. ஆம் என் தந்தையை நான் இழ்ந்ததும் இப்படிதான்... எந்த போதை வஸ்துகளுக்கும் அடிமையாகாத, விளையாட்டு வீரரான என் தந்தை தினமும் காலை 6மணி முதல் 9மணி வரை டீக்கடையில் நண்பர்களுடன் டீ குடித்துவிட்டு அரசியல், பொழுதுபோக்கு மற்றும் சில உள்ளூர் பஞ்சாயத்துகளும் பேசும் பழக்கம் உள்ளவர், நண்பர்கள் சிலர் புகைக்கும் பழக்கம் உள்ளதாலும், வாகன புகை, புழுதி அதிகம் உள்ள இடம் என்பதாலும் புற்று நோயின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது, ஆனால் இது முற்றிய நிலையில் தான் தன் வேலையை காட்டியது.. எனது சித்தப்பா இந்தியவின் மிகப்பெறிய மருத்துவ அதிகாரியாக இருந்தும் பலனில்லை. நண்பர்களே நம்மால் முடியாதது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. முயன்றால் முடியும், நாம் நம் வாழ்கையில் சில நெறிமுறைகளை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். HealthAdult Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 957 views கருத்துகள் அருமையாக சொல்லியிருக்கீங்க அருமையாக சொல்லியிருக்கீங்க வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments சிறந்த உளநல வழிகாட்டல் நம்மாளுங்க எதுவும் வந்த பிறகு தான் இப்படியான உளநல வழிகாட்டல்களைப் படிக்கிறாங்க... இதனைப் படித்த பிறகேனும் நலமாக வாழ முயலட்டும்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments ஜஃப்னா நண்பரே வணக்கம், ஜஃப்னா நண்பரே வணக்கம், அனைவரும் அங்கே நலமா? உங்கள் சேவை தமிழுக்கு தேவை. தொடரட்டும் உங்கள் பணி... என்றும் நான் உங்களுடன் பக்கபலமாய்... தில்லை.வேழவன் Log in to post comments நண்பரே வினோத் உங்கள் நண்பரே வினோத் உங்கள் நிருத்தத்தில் இரங்கினாலும் எங்களை மறந்துவிடாதீர்கள்.. தில்லை.வேழவன் Log in to post comments nantraga irukku nantraga irukku Log in to post comments
அருமையாக சொல்லியிருக்கீங்க அருமையாக சொல்லியிருக்கீங்க வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
சிறந்த உளநல வழிகாட்டல் நம்மாளுங்க எதுவும் வந்த பிறகு தான் இப்படியான உளநல வழிகாட்டல்களைப் படிக்கிறாங்க... இதனைப் படித்த பிறகேனும் நலமாக வாழ முயலட்டும்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
ஜஃப்னா நண்பரே வணக்கம், ஜஃப்னா நண்பரே வணக்கம், அனைவரும் அங்கே நலமா? உங்கள் சேவை தமிழுக்கு தேவை. தொடரட்டும் உங்கள் பணி... என்றும் நான் உங்களுடன் பக்கபலமாய்... தில்லை.வேழவன் Log in to post comments
நண்பரே வினோத் உங்கள் நண்பரே வினோத் உங்கள் நிருத்தத்தில் இரங்கினாலும் எங்களை மறந்துவிடாதீர்கள்.. தில்லை.வேழவன் Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162