சித்தர்கள் என்பவர்கள் எல்லாம் முற்றும் துறந்த மனிதர்கள் தாம்.
தனது தேவைகளைக் குறைத்துக் கொண்டு தனக்குத் தானமாக கிடைக்கும் பணத்தையும் பிறர்க்கு தானமாக கொடுத்தார்கள்.
அவர்கள் பேரிலோ அவரது குடும்பத்தார் பேரிலோ சொத்து சேர்க்கவில்லை.
அவர்கள் ஒருபோதும் கடவுளின் சீடர்கள் என்று தாமாகவே தன்னைச் சொல்லிக்கொள்ளவில்லை.
இல்வாழ்க்கை முழுதும் துறந்து இறைவன் வழியில் சென்றார்கள்.
ஒரே இடம் ஒரே கோயில் என்று இல்லாமல் உலகெங்கும் வளம் வந்தார்கள்.
தனக்கு சேவை செய்வதற்கென்று யாரையும் வைத்துக்கொள்ளவில்லை.
தனது வேலைகளை தானே செய்து கொண்டார்கள்
ராகவேந்திரர் மற்றும் மாயாண்டி சுவாமிகள் என தமது உடலைவிட்டு உயிர்பிரியும் நாளையும் நேரத்தையும் சொல்லி உயிர் நீத்த உத்தமர்களும் ஏராளம்.
தன்னிடம் தஞ்சம் அடைந்த பக்தர்களயும் இறைவனை வழிபடவே வழிகாட்டினார்கள்.
தன்னை பூஜிக்க சொல்லவேயில்லை
எனவே மனிதன் தன் வேலையையும் கடமையையும் முறையாகச் செய்தான் என்றால் முக்தி அடைவது நிச்சயம்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர் எவரும் தேவையில்லையே!
------------------------------------------
சரவணமுத்து
கருத்துகள்
சரியாசொன்னிங்க பாஸ்....
சரியாசொன்னிங்க பாஸ்.... 
>>>Selvakumar<<<













