முருங்கைய ஒடிச்சு வளர்க்கணும்; புள்ளய அடிச்சு வளர்க்கணும்
முருங்கை மரம் அதன் காய், இலை, விதை, பட்டை போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும்.
ஆனால் இதன் மரம் பெரிய மரமாக வளர்க்கப்படுவதில்லை. அப்படியே வளர்ந்தாலும் அதன் மரம் மற்ற மரம் போல பயன்படுவதில்லை.
ஏனென்றால் அது மெல்லிய தன்மை கொண்டது. எளிதில் உடைந்து விடும். இதானலேயே முருங்கை வீட்டின் கூரைக்கு மேல் வளர அனுமதிக்க மாட்டார்கள். தெரியாதவர்கள் அம்மரத்தி்ல் ஏறிவி்ட்டால் ஒடிந்துவிழுந்துவிடும்.
முருங்கை இலையை மருந்துக்காகவும் உணவில் கீரை போலவும் பயன்படும். அது நன்கு வளர அடிக்கடி கிளைகளை நன்கு வளராமல் முறித்து வி்ட்டால் அது மேலும் சீக்கிரம் தளிர்விட்டு காய்க்கும்..
இதே போல தவறு செய்யும் குழந்தைகளை தண்டித்து வளர்த்தால் பிற்காலத்தில் நல்ல மனிதராக வளர்ந்து சமுதாயத்திற்கு பயன்படுவான். அளவிற்கு மீறி செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகள் அதிகமாக பொறுப்பில்லாமல் இருப்பதையை சமூகத்தில் காணமுடிகிறது.
புள்ளை என்பது - பிள்ளை அல்லது குழந்தை எனபதன் பேச்சு வழக்கு.

