Skip to main content

தமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?

URI: http://tamilnanbargal.com/node/25604
கருத்துகள்: 20Likes: 46505 viewsசிறப்பு பதிவு

தமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?

admin's படம்

நமது தளத்தில் தங்களது படைப்புகள் வெளிவரவேண்டும் என நீங்கள் கருதினால் உங்களுக்காக சில உதவித்துளிகள் இதோ: 

தமிழ் நண்பர்கள் தளம் வெறும் பதிவுகள் மட்டுமல்லாது நட்பு வட்டாரம் உருவாக்கவும் அனுமதிக்கிறது.

தமிழ் நண்பர்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் படைப்புகளை மின்னஞ்சலாக அனுப்பிவைத்து அதை சரிபார்த்து வெளியிடும் நடைமுறை நம் தளத்தில் கிடையாது. உங்களது படைப்புகளை நீங்களாகவே நம் தளத்தில் உடனுக்குடன் வெளியிட முடியும். மாற்றங்களும் செய்துகொள்ள முடியும். உங்கள் படைப்புகளை முதன் முதலில் இங்குதான் வெளியிடவேண்டும் என்றோ அல்லது வேறு எந்த தளத்திலும் இதுவரை வராததாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோ நம் தளத்தில் கிடையாது. உங்களது சொந்த படைப்புகள் எத்தனை நாட்களுக்கு முன் படைக்கப்பட்டதாக இருப்பினும் அதை இங்கு வெளியிட உங்களுக்கு உரிமை உள்ளது. சொந்த படைப்பை நீங்கள் வெளியிடமுடியும்.

தயவு செய்து உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் இவ்வாறு பதியவும். மற்றவர்கள் படைப்பை பதிவது தளவிதிமுறைகளுக்கு எதிரானது. அவ்வாறு போட வேண்டி கட்டாயத்தில் பதிவின் நிஜ படைப்பாளரின் அனுமதி பெற்று, அப்பதிவை உரையாடல்/விவாத மன்றம் (Forum) பகுதியிலோ அல்லது வலைப்பதிவாகவோ பதியலாம், ஆனால் கண்டிப்பாக நிஜ எழுத்தாளரின் பெயர், இணைய முகவரி போன்றவற்றை பதிவில் குறிப்பிட்டு அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்..
 

 

பதிவுகளை பதிய வழிமுறை:
  • முதலில் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தளத்தினுள் நுழையவும்.
  • தளத்தில் நுழைந்த பின் தளத்தின் மேல் பகுதிலில் "+ பதிவு செய்" என்பதிலிருந்து கவிதை, கட்டுரை போன்ற உங்களது படைப்பின் வகையை தெரிவு செய்யவும்.
  • அதில் வரும் பக்கத்தில் படைப்பின் விபரங்களை கொடுத்து சேமித்துக்கொள்ளவும். 
  • இவ்வாறு சேமிக்கப்பட்ட பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிமைக்கவோ அல்லது திருத்தவோ அனுமதி உண்டு. அதை செய்ய அந்த படைப்பின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் "மாற்று/திருத்து" என்பதை தெரிவு செய்து மாற்றிக்கொள்ளலாம்.
  • படைப்புகளை தவறாக பதிந்து அதை அழிக்கவோ அல்லது மேலும் உதவிக்களுக்கோ http://tamilnanbargal.com/contact இங்கே சென்று தொடர்பு கொள்ளலாம்.
  • படைப்பின் வகையை சரியாக தெரிவுசெய்து வெளியிடவும். உதாரணமாக SMS சிரிப்புகளை கவிதை பக்கத்தில் பதிய வேண்டாம்.
தானாகவே உங்கள் வலைப்பூவில் இருந்து பதிவுகளை நம் தளத்தில் இணைக்க http://tamilnanbargal.com/node/291 இங்கே பார்க்கவும்
தங்கள் வலை முகவரி, இணையதள முகவரி போன்றவைகளை தங்கள் கையெழுத்தாக வைக்கவும், அதையே தங்கள் பதிவுகளின் கீழ் போட்டுக்கொள்ளவும் அனுமதி உண்டு. ஆனால் அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதிக முறை போடுவது ஸ்பேம் எனக்கொள்ளப்படும். சில நேரம் உங்கள் வலைதளத்தின் ஒரு பதிவின் முகவரியை மட்டும் இத்தளத்தின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதை Wall Post/status messgae ஆக மட்டும் போட்டுவிட வேண்டுகிறோம். இதைச் சாதாரண பதிவாக பதிய அனுமதி இல்லை.
அனைத்து பதிவுகளும் நம் தளத்தின் விதிமுறைகள் http://tamilnanbargal.com/node/45 க்கு உட்பட்டது
சிறப்பு பதிவுகளை அல்லது தளத்தில் இதுவரை வகைபடுத்தப்படாத வகையான பதிவுகளை பதிய விரும்பினால் தயவு செய்து அதன் முழுவிபரங்களை http://tamilnanbargal.com/contact இங்கே சென்று அனுப்பி வைக்கவும்.

 

இத்தளம் தமிழிற்காகவும் நண்பர்களுக்காகவும் இலவசமாக செயல்படுவதால் தங்கள் படைப்பிற்கு தற்போது வெகுமதிகள் வழங்கப்படமாட்டாது. போட்டிகளுக்கு கண்டிப்பாக பரிசு உண்டு. 

தளத்தில் வரும் விளம்பரங்கள் தளம் தொடர்ந்து செயல்பட மட்டும் பயன்படுத்தப்படும்.

 

நன்றி

தமிழ் நண்பர்கள்

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

மிகவும் நன்றி.

அன்புடன் நான்
செல்வகுமார்
தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்

vmoorthy's படம்

அருமை! நல்ல‌ பயன் தரக்கூடிய‌
தளத்தில் நான் சேர்ந்ததைக்குறித்து மிகவும் மகிழ்கிறேன்

moo

நல்லதொரு தளம். சிறக்க வாழ்த்துக்கள். தேசமும் தெய்வீகமும் என் கண்கள். அதை உயர்த்த பாடுபடும் அனைவரையும் பணிந்து வணங்குகிறேன்.      

"மெல்லத் தமிழினிச் சாகும்
அந்த மேற்கு மொழிகள் புவியின்மிசை யோங்கும்
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

என்று பாரதி பணித்த பாதையில் பயணிக்கும் தளத்திற்கும், தள நண்பர்களுக்கும் 
என் நன்றிகள் பல‌! 
" width="44" />

        சாரல் மழை
 மெதுவாக சாரல் மழை தூரலில் குடைபிடித்தபடியே அவள் நடந்து சென்றாள் அவள் பெயர் மஞ்சு இணையத்தளத்தில் நீண்டநேரம் தன்னை தொலைத்துக்கொண்டு தன் உடலையும்  மனதையும் விசாளமாக்கிகொண்டவள்
 நிறைய இறக்க குணம் இன்றுவரை  பத்துமுறை ரத்த தாணம் செய்துள்ளாள் o + ரத்தவகையை சேர்ந்ததால் தனக்கு அழைப்பு வரும்போதெல்லாம்  செஞ்சிலுவை சங்கத்துக்கு சென்று  ரத்தம் கொடுப்பவள்
  கண்தானம் செய்வதும் தன் இலக்காக கொண்டவள் உடல் உறுப்பு தாணம் செய்வதற்கு தன் கணவருடன் கருத்துவேறுபாடு கொண்டவள்
தன் இரு மகன்களும் வெளிநாடு சென்று படிப்பதால்  குடும்ப சுமை இல்லாமல் தான் உண்டு தன்குடும்பம் உண்டு இணையம் உண்டு என்று வாழ்பவள்
 மஞ்சுவுக்கு இணையத்தில் நண்பர்கள் வட்டம் பெரிது  
தன் உடல்நிலை பற்றி எப்போதும் கவலைப்படாதவள் அன்றுமட்டும் ஏனோ தன்னைமறந்து  கண்கள் கசிந்தாள் தன் கணவரை அருகில் அழைத்து தோல்சாய்ந்தாள் இப்பொதுதான் முதன்முதலாக  வருத்தப்பட்டாள்    
 மாதங்கள் கடந்தன தன் உடல் மாற்றம் உணர்ந்தாள் தன்னைப்பற்றி  மகன்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமென  கேட்டுக்கொண்டாள் வெளிநாட்டில் படிக்கும்  பிள்ளைகள்  தாய்பாசத்தால்  பேதளித்து போவார்கள் என்று  வருத்தப்பட்டாள்
 நூறு கிலோவாக இருந்த தன் உடல் ஐம்பதை தொட்டவுடன் கவலைமேல் கவளைகொண்டாள்  தன் பிள்ளைகளை காணவேண்டும் என ஆசைகொண்டாள் மின்னஞ்சல் செய்தாள்  தன் முகநூல் நட்ப்புக்களுக்கும் தன்னிலை உணர்த்தினாள்
அன்று அன்றுதான் அவளின் கடைசி நாள் என்று அவளுக்கே தெரியாது
 தன் இரு பிள்ளைகள் வந்ததும் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி ஆசுவாசப்படுத்தி கண்ணீர்துடைத்து  கரம்பிடித்து  மகன்கள் கையால் தண்நீர்குடித்து தன் உயிர் மூச்சை நிறுத்தியிருந்தாள்
அவளின் மறைவு கண்டு வாணமும் நீர்கசிய வையமும் நீர்கசிய  பேரிடி  குமுரளோடு அந்த பாசக்காரியின்  பட்டுடல் உடல் உறுப்புதானத்துக்கும் உதவாது என்று சொல்லி மயானக்கரைக்கு மண்ணுக்கு இறையாக்கி மலர்தூவி நீர்கசிய
இரு மகன்களும் நீர்கசிய முகநூல் நண்பர்களும் முகவரிதெரியாத நண்பர்களும் அஞ்சலி கடிதத்தால்  மஞ்சுவின்    மலருடல்  நீண்ட நித்திரையில் மெதுவாக சாரல் மழை தூரலில் குடைபிடித்தபடியே இரு மகன்களும்
 
 
 
 
 
 
 
 

        சாரல் மழை
 மெதுவாக சாரல் மழை தூரலில் குடைபிடித்தபடியே அவள் நடந்து சென்றாள் அவள் பெயர் மஞ்சு இணையத்தளத்தில் நீண்டநேரம் தன்னை தொலைத்துக்கொண்டு தன் உடலையும்  மனதையும் விசாளமாக்கிகொண்டவள்
 நிறைய இறக்க குணம் இன்றுவரை  பத்துமுறை ரத்த தாணம் செய்துள்ளாள் o + ரத்தவகையை சேர்ந்ததால் தனக்கு அழைப்பு வரும்போதெல்லாம்  செஞ்சிலுவை சங்கத்துக்கு சென்று  ரத்தம் கொடுப்பவள்
  கண்தானம் செய்வதும் தன் இலக்காக கொண்டவள் உடல் உறுப்பு தாணம் செய்வதற்கு தன் கணவருடன் கருத்துவேறுபாடு கொண்டவள்
தன் இரு மகன்களும் வெளிநாடு சென்று படிப்பதால்  குடும்ப சுமை இல்லாமல் தான் உண்டு தன்குடும்பம் உண்டு இணையம் உண்டு என்று வாழ்பவள்
 மஞ்சுவுக்கு இணையத்தில் நண்பர்கள் வட்டம் பெரிது  
தன் உடல்நிலை பற்றி எப்போதும் கவலைப்படாதவள் அன்றுமட்டும் ஏனோ தன்னைமறந்து  கண்கள் கசிந்தாள் தன் கணவரை அருகில் அழைத்து தோல்சாய்ந்தாள் இப்பொதுதான் முதன்முதலாக  வருத்தப்பட்டாள்    
 மாதங்கள் கடந்தன தன் உடல் மாற்றம் உணர்ந்தாள் தன்னைப்பற்றி  மகன்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமென  கேட்டுக்கொண்டாள் வெளிநாட்டில் படிக்கும்  பிள்ளைகள்  தாய்பாசத்தால்  பேதளித்து போவார்கள் என்று  வருத்தப்பட்டாள்
 நூறு கிலோவாக இருந்த தன் உடல் ஐம்பதை தொட்டவுடன் கவலைமேல் கவளைகொண்டாள்  தன் பிள்ளைகளை காணவேண்டும் என ஆசைகொண்டாள் மின்னஞ்சல் செய்தாள்  தன் முகநூல் நட்ப்புக்களுக்கும் தன்னிலை உணர்த்தினாள்
அன்று அன்றுதான் அவளின் கடைசி நாள் என்று அவளுக்கே தெரியாது
 தன் இரு பிள்ளைகள் வந்ததும் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி ஆசுவாசப்படுத்தி கண்ணீர்துடைத்து  கரம்பிடித்து  மகன்கள் கையால் தண்நீர்குடித்து தன் உயிர் மூச்சை நிறுத்தியிருந்தாள்
அவளின் மறைவு கண்டு வாணமும் நீர்கசிய வையமும் நீர்கசிய  பேரிடி  குமுரளோடு அந்த பாசக்காரியின்  பட்டுடல் உடல் உறுப்புதானத்துக்கும் உதவாது என்று சொல்லி மயானக்கரைக்கு மண்ணுக்கு இறையாக்கி மலர்தூவி நீர்கசிய
இரு மகன்களும் நீர்கசிய முகநூல் நண்பர்களும் முகவரிதெரியாத நண்பர்களும் அஞ்சலி கடிதத்தால்  மஞ்சுவின்    மலருடல்  நீண்ட நித்திரையில் மெதுவாக சாரல் மழை தூரலில் குடைபிடித்தபடியே இரு மகன்களும்
 
 
 
 
 
 
 
 

அன்பு  வணக்கம் ...

படைப்புக்கள் பல படைக்க ஆர்வம் ...
இருந்தும் சிறு பயம் எனக்குள்ளே ....
என் படைப்புகளில் தவறுகள் நேர்ந்திடுமோ! - என்று,

இனிய தமிழ் நண்பர்களே ...
என் படைப்புக்களில் தவறுகள் இருப்பின் ,
மன்னிப்பதோடு , திருத்தங்களை சுட்டிக்காட்டுங்கள் .....

உங்களுடன் இணைந்ததனை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் ..

நன்றி ..

என்றும் ..
உங்கள் நண்பி ,
சீ.ஸஜீதா