அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால்
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share
கருத்துகள்
வரலாறு மறக்க இயலாத துயரம்
வரலாறு மறக்க இயலாத துயரம் இவை
காலம் தான் இவற்றின் வடுவை ஆற்ற வேண்டும். 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கருத்து என்ன எழுத. மரண
கருத்து என்ன எழுத. மரண அவதிப்பட்ட என் மக்களின் நிலையை எண்ணி நெஞ்சு விம்முகிறது. வீரத்திற்கு விலைபோன நாம் இன்று இந்த நிலைக்கு ஆளானோம். நான் ஈழத்தில் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டுகிறது. அகதிகளாக வரும் நம்மவர்களைப் பார்த்து அந்தோ! என்ன பாவம் செய்தேன் நான். என்று மாறும் இந்த நிலை. காலம் மாறும் வரை காத்திருப்போம் என்றாவது ஒரு நாள் விடியல் வராதா?
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்












