jram178's படம்

        எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
            இதயம் விம்ம அழுதேனே
        அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
            அலறிய சேனலை நோக்கிலையா
        விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
            வெறியொடு எங்கும் திரிந்தானே
        தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
              துயரை நீக்கித் தருவாயா
        நாதியும்  அற்றுப் போனானே-தனக்கோர்
             நாடும்  அற்றுப் போனானே
        பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
            பெற்றால் உனக்கோர் திருநாளாம்
        வீதி உலாவும்  வருவாயே-எம்
           வேண்டுதல் நடத்தி தருவாயே
        நீதி இல்லா  உலகமிது –துளியும்
           நேர்மை யில்லா உலகமிது
        உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
            உனக்குமா கருணை விழியில்லை
        பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
             பொருளை நாங்கள் கேட்கவில்லை
        அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
            ஆண்டால் தானே வளம்சூழும்
        மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
            மண்ணில் உயிரை விடமாட்டோம்
        எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
             இருந்தும் என்ன பயன்கண்டோம்
        சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
              செய்வாய் அருள்வாய் விரைவாநீ
        எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
             இனவெறி மொழிவெறி கொடியர்களே
         புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
             போதனைக் ஏற்கும நாடில்லை
          வருவாய்  இறைவா  வருவாயா-ஈழ
             வளமையை  மீண்டும்  தருவாயா
          திருவாய்  திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
             தீயோர் செய்தார்  படுநாசம்
         ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
             ஓரம்தானே அவர் எல்லை
         கருவாய்  உருவாய் அழிந்தாரே-உலகம்
            காணவும் கண்ணீர் பொழிந்தாரே


                                                புலவர் சா இராமாநுசம்

                                                              

                                                       

 

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

இறைவனை இறைஞ்சும்


5

இறைவனை இறைஞ்சும் இனியவரே
இத்தனை உயிர்கள் இழந்தும் வந்தாரா
இருந்தால் தான் அவர் வருவாரே
தமிழில் பாக்கள் பாடினால் கேட்பாரோ
முயற்சி என்றொரு உத்தியைப் பயன்படுத்தி
தமிழர் பெறுவார் தனித் தமிழீழம்!

kirikasan's படம்

தங்கள் இதய ஏக்கம் மனதை தொட்டு


9

தங்கள் இதய ஏக்கம் மனதை தொட்டு உருக வைக்கிறது ஐயா! நன்றிகள்!
அருமையான கவிகல் ஐயா! நீடூழி வாழ்வீர்கள் ஐயா!