Skip to main content

ஜெயகாந்தன்

URI: http://tamilnanbargal.com/node/34234
கருத்துகள்: 0Likes: 0933 viewsசிறப்பு பதிவு

ஜெயகாந்தன்

இயற்பெயர்: 
ஜெயகாந்தன்
சிறப்புப் பெயர்கள்: 
ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவராவார்.

ஜெயகாந்தன் நாவல்கள் மிகவும் பிரபலமானவை.

காலம்: 
செவ்வாய்கிழமை, April 24, 1934

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்

இடம்: 
கடலூர்
India
பொது வாழ்க்கை: 

அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கிய அவர் சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதினார்.

படைப்புகள்: 

நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்

  1. வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
  2. கைவிலங்கு (ஜனவரி 1961)
  3. யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
  4. பிரம்ம உபதேசம் (மே 1963)
  5. பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
  6. கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
  7. பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
  8. கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
  9. சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
  10. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
  11. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
  12. ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
  13. கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
  14. ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
  15. பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
  16. எங்கெங்கு காணினும்... (மே 1979)
  17. ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
  18. கரிக்கோடுகள் (ஜூலை 1979)
  19. மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
  20. ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
  21. ஒவ்வொரு கூரைக்கும் கீழே...(ஜனவரி 1980)
  22. பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
  23. அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
  24. இந்த நேரத்தில் இவள்... (1980)
  25. காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
  26. காரு (ஏப்ரல் 1981)
  27. ஆயுத பூசை (மார்ச் 1982)
  28. சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
  29. ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
  30. ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
  31. இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
  32. இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
  33. காற்று வெளியினிலே...(ஏப்ரல் 1984)
  34. கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
  35. அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
  36. இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
  37. ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
  38. சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
  39. உன்னைப் போல் ஒருவன்
  40. ஹர ஹர சங்கர (2005)

சிறுகதைகள் தொகுப்புகள்

  1. ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
  2. இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
  3. தேவன் வருவாரா (1961)
  4. மாலை மயக்கம் (ஜனவரி 1962)
  5. யுகசந்தி (அக்டோபர் 1963)
  6. உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
  7. புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
  8. சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
  9. இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
  10. குருபீடம் (அக்டோபர் 1971)
  11. சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
  12. புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
  13. சுமைதாங்கி
  14. பொம்மை

சுய வரலாறு

  1. ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
  2. ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )

வாழ்க்கை வரலாறு

  1. வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
  2. ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

கட்டுரை

  1. பாரதி பாடம்
  2. இமயத்துக்கு அப்பால்

திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்

  1. சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
  2. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
  3. ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
  4. உன்னைப் போல் ஒருவன்
  5. யாருக்காக அழுதான்
  6. புதுச் செருப்பு

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்

  1. உன்னைப் போல் ஒருவன் (1965)
  2. யாருக்காக அழுதான்
விருதுகள்: 

சாகித்திய அகாதமி விருது
2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது

இவர் தன் "உன்னைப் போல் ஒருவன்" நாவலை திரைப்படமாக இயக்கி அதே பெயரில் வெளிவந்து சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. படம் வெளிவந்த ஆண்டு 1965.

படங்கள்: 
மொத்த வாக்குகள்: 0

Add comment

Log in to post comments