இணையத்தில் அதிகம் உலாவுபவராக இருந்தாலும் அதிக வேலைப்பளு உள்ளவராகயிருந்தாலும் தங்களின் தூக்க நேரத்தை தியாகம் செய்யவேண்டிவரும். அதுவும் ஓரளவுக்கு மீறிப் போனால் உங்கள் ஆயுளை உங்கள் வேலைகளுக்காக பணையம் வைக்கவேண்டிவரும் என சமீபத்திய ஆய்வு குறிப்பொன்று கூறுகிறது. குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் அதேபோல அதிகபட்சம் 9 மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்கிறது. உங்களை விட உங்கள் பிரியமானவர்களுக்காகவாவது உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
http://www2.warwick.ac.uk/newsandevents/pressreleases/short_sleep_increases/
கருத்துகள்
வெயிலைச்சமாளிக்க...
வெயிலுக்கு உகந்தது கதராடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சிடுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.*
வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக
அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள்
பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க "ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்'
அணிவது நல்லது.* உடல் சூட்டையும், தோல் நோயையும்
தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு,வெள்ளரி,
தர்ப்பூசணி அதிகம் சாப்பிட வேண்டும்.* வியர்வை
நாற்றத்தைப் போக்க குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து,
அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில்
தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் வராது. * கோடைக் காலத்தில் வரும் அக்கி அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.*
காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இந்தச்
சீச னில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.* ரோஜாப்பூ,குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.* வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். *
மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக்
காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெயைத் தலைக்குத்
தேய்த்துப்படுத்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப்
பொடி தேய்த்துக் குளிப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது.*
குளிக்கும்போது தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்துக் கடைகளில்
தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி சோப்புக்குப்
பதிலாகப் பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய்
வழியாமல் நிற்கும்.http://usetamil.forumotion.com/ 










