பொதுவாக குழந்தைப் பருவத்தில் இனிப்புச் சுவையைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். பிறகு வளர்ந்ததும், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவையில் விருப்பம் ஏற்படும்.
ஆனால், குழந்தைகளுக்கு அனைத்து சுவைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
பொதுவாக ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை மட்டும் கொடுக்காமல், அன்னாசிபழம், பப்பாளிப்பழம் போன்றவற்றையும் குழந்தைகள் சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை அரைத்துக் கொடுக்கும் வழக்கம் கிராமங்களில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது. அதனை நமது குழந்தைகளுக்கும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதேப்போல சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் பொறியல் உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வைக்க முயற்சி செய்ய வேண்டும்.