vinoth's படம்

----------------- திருமணமானவர்களுக்கு மட்டும் ----------------

அதிக உடலுறவு என்பது தொடக்கக்காலத்தில் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் நாளடைவில் அது அளவுக்கு அதிகமாக சென்றால் கேடுகள் விளையும்.

அதிக உடலுறவால் வரும் கேடுகள்
==========================

உடலி்ல் உயிர்சக்தியே பிரதானம். அது குறைவால் சோர்வு ஏற்படும். அதனாலேயே தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது. அதிக சேர்வு நாளைடைவில் நரம்புத்தளர்ச்சி நோயை உண்டாக்கும்.

எந்த வேலையைச்செய்தாலும் தெளிவாக செய்யமுடியாத நிலை ஏற்படும். கிட்டத்தட்ட ஒரு வாரம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் நம்முள் இருக்கும் ஒரு இயல்பான உற்சாகம் உடலுறவினால் உற்சாகம் போய் தளர்வு ஏற்பட்டுவிடும. ஆனால் அதில் உள்ள ஆசையால் இதை நாம் கவனிப்பதி்ல்லை..

அதிக உடலறவால் ஞாபக சக்தி குறைந்து மறதி அதிகமாகும். இதனால் தெளிவான முடிவு எடுக்க முடியாமை ஏற்படும்.

அதிக சுகபோகத்தினால் ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, கண்கள் நோய் இவைகள் ஏற்படும்.

இரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு அதிக சுக போகம் மிக கெடுதல்.

முக்கியமாக பெண்களுக்கு முதுகெலும்பு வலி அதிகமாகும். அதுவும் 40, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது கோபத்தையும் அதிகமாக்கும். அவர்களுக்கு தேவை ஆறுதலும் அரவணைப்புமே.

மேலும் அதிக உடலுறவால் உடல் வலு குறைந்து முகப்பொலிவிழந்து அழகு குறைந்து காணப்படும். இளமையிலேயே முதுமை தோற்றத்தை கொடுக்கும்.

அதிக சுகபோகத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும். எல்லா நோயும் சீக்கிரம் வந்து சேரும். (நோ்ய் வந்தால் தான் மருத்துவரை அணுகுவோம். அணுகினால் தானே மருத்துவருக்கு லாபம்? இதனாலேயே மருத்துவர்கள் இதை தவறு என்று சொல்வதேயில்லை. )

இந்த சுகத்தை விரும்பாத ஆண்கள் இல்லை. இதனாலேயே இதில் உள்ள சில நிறைகள சொல்லி அதிக குறைகளை சொல்லாமல் விட்டுவிடுவதை காணலாம்.

பிரம்மச்சரியம் மேற்கொண்டால் உடல் மற்றும் மன சக்தி அதிகமாகும். சில உடலால் இந்த சக்தியை தாங்க முடியாமை ஏற்படும். அதற்கு தக்க குருவை அணுகி அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இல்லறமோ அல்லது பிரம்மச்சரியமோ எல்லாவற்றையும் தன் உடல் நலத்தை அறிந்து அதற்கேற்ப அளவோடு கையாளுதல் மிக்க நலம்.

நலமுடன் வாழ்வோம்

7
Your rating: None Average: 7 (6 votes)

கருத்துகள்

kumaran's படம்

பிரம்மச்சார்யம் இயற்கைக்கு


பிரம்மச்சார்யம் இயற்கைக்கு மாறான செயல். கலவி என்பது உயிர்களுக்கு இன்றியமையாதது. வயிற்றுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதுபோல உடலுக்கு உடலுறவு அவசியம் தேவை. சரியான வயதில் ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் கலவி உடலையும் மனதையும் வளமாக்குகிறது. சமூக குற்றங்களையும் குறைக்கிறது.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

"சமூக குற்றங்களையும்


5

"சமூக குற்றங்களையும் குறைக்கிறது."

ஹாஹா, எப்படி பாஸ் சிரிக்காம காமடி பண்றீங்க... நீங்க சொல்ற இயற்கையான செயலுக்காகத்தான் சமூக கேடுகள் நிறைய நடக்கிறது..

உடலுறவு வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.. அது இல்லத்தவர்களுக்கானது.. அதிலும் அது அதிகமானால் வரும கேடுகள் தான் கட்டுரை...


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

அந்த இயற்கையான தேவை இந்த


அந்த இயற்கையான தேவை இந்த சமூகத்தில் சரிவர கிடைக்காமல்தானே பாஸ் குற்றங்கள் நடக்கின்றன.ஹா.....ஹா......ஹா.......சிரிச்சிகிட்டே நல்லா காமெடி பண்றிங்க பாஸ்....பலருக்கு உடலுறவுக்கே வழியில்லை..இதுல அதிக உடலுறவு .........?!!! .
மனமும் உடல் நலமும் சரியாக இருந்தால் 60 வயதில் கூட உடலுறவு கொள்ளலாம் என மருத்துவர்கள் பலர் விளக்கியிருக்கிறார்கள்.....படித்து பயனடையுங்கள் பாஸ்...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

ஐயா, "உடலுறவுக்கே வழியில்லை"


5

ஐயா, "உடலுறவுக்கே வழியில்லை" என
நீங்க சொல்ல வருவது கல்யாணம் ஆகாதவருக்கு.. : )

கல்யாணம் ஆகலைன்னா இதெல்லாம் பத்தி யோசிக்கவே கூடாது.. தப்பு.. தப்பு... : )

நீங்க சொன்ன உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் எதையும் அளவோடு வைத்திருப்பது முக்கியம்..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

ஐயா, "உடலுறவுக்கே வழியில்லை"


ஐயா, "உடலுறவுக்கே வழியில்லை" என
நீங்க சொல்ல வருவது கல்யாணம் ஆகாதவருக்கு.. : ) Laughing out loud

கல்யாணமாகியும் நம்ம ஊர்ல நிறைய பேரு சும்மாதான் சுத்திகிட்டு இருக்காங்க பாஸ்.... Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

நாடி நரம்புகள் சுறுசுறுப்படைய...


7

நாடி நரம்புகள் சுறுசுறுப்படைய
உடலுறவு தேவை - அது
உடலில்
நோயை எதிர்க்கும் பலத்தை
உண்டு பண்ணுமே!
பிள்ளை குட்டி பெற்றாலும்
சாகும் வரை அளவோடு தொடர்ந்தால்
நீண்ட ஆயுள் கிட்டுமே!
அளவென்பது
உளநிறைவும் உடற்பலமுமே!
அளவுக்கு மிஞ்சினால் (ஏழலில் 3 நாள்)
அமுதமும் நஞ்சாகுமென்பதை
நினைவிற் கொள்க!
என் கருத்தில் ஐயம் இருப்பின்
மருத்துவரை நாடவும்!
:*


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil