உடற் தூய்மை என்பது
உடலைத் தேய்த்து நிராடி
அளவோடு உண்டு
நடந்து பயின்று
மகிழ்வோடு பழகி
உறுதியாய் இருத்தலே!
அப்படியாயின்
உளநோய் எப்படி?
கோபம், பொறாமை, எரிச்சல்
மட்டுமல்ல
தாழ்வான எண்ணம்
மாற்றாரை வீழ்த்தி முந்த நினைப்பது
இன்னும் எத்தனையோ இருந்தாலும்
நேர் விளைவு, பக்க விளைவு , பின் விளைவு
எல்லாவற்றையும் மறந்து
முடிவெடுப்பதால் கிடைக்கும் அறுவடையே
உளநோயின் தூண்டி!
உளநோயின் தூண்டிகளை
முளைவிடாமல் தடுத்தால்
நலமாக வாழலாமே!

கருத்துகள்
உளநோயின்
உளநோயின் தூண்டிகளை
முளைவிடாமல் தடுத்தால்
நலமாக வாழலாமே!
சரியாகச்சொன்னீர்கள்
பாதி நோய்களுக்கு மனமே காரணம்
மீதி நோய்களுக்கு சுற்றுச்சுழலும், வாழ்க்கைமுறையும் காரணம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









