கதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ன?
எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லோரும் நினைப்பது போல நம் கதை படிப்பவர் மனதில் ஆழமாக பதிய வேண்டும், உருக்கமாக உணர்வுகளை வருடி செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால்... ஆனால்... இந்த ஆனால் என்ற வார்த்தை இருக்கிறதே. இது வந்தாலே ஏதோ குழப்பம் என்பது பொருள்.