பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.