பதிந்தது vinoth நாள் செவ்வாய், 01/05/2012 - 1:56am
கணினி முன் உட்கார்ந்தேன். கதை எழுத வேண்டும்.
கதையை கதையாகவே எழுதுபவர் சிலர். கதையை கற்பனையாக்கி பல ரசங்களையும் கலந்து கொடுப்பவர் சிலர். கதையை நடந்ததை நடப்பதாக சொல்லி நகர்பவர் சிலர். கதையை கருத்தில் நிறுத்தி கருத்தை முன்வைப்பவர் சிலர். கதா பாத்திரத்தின் மனதிலிருந்து கதை சொல்பவர் சிலர்.
எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லோரும் நினைப்பது போல நம் கதை படிப்பவர் மனதில் ஆழமாக பதிய வேண்டும், உருக்கமாக உணர்வுகளை வருடி செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால்... ஆனால்... இந்த ஆனால் என்ற வார்த்தை இருக்கிறதே. இது வந்தாலே ஏதோ குழப்பம் என்பது பொருள்.